Versions
TOV கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; சீதோனே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் நடுவிலே மகிமைப்படுவேன்; நான் அதிலே நியாயத்தீர்ப்புகளைச் செய்து, அதிலே பரிசுத்தரென்று விளங்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
IRVTA யெகோவாகிய தேவன் சொல்லுகிறார்; சீதோனே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் நடுவிலே மகிமைப்படுவேன்; நான் அதிலே நியாயத்தீர்ப்புகளைச் செய்து, அதிலே பரிசுத்தரென்று விளங்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
ERVTA "எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: என்று சொல். ‘"சீதோனே நான் உனக்கு எதிராக இருக்கிறேன்! உன் ஜனங்கள் என்னை மதிக்க கற்பார்கள். நான் சீதோனைத் தண்டிப்பேன். பிறகு, நானே கர்த்தர் என்பதை ஜனங்கள் அறிவார்கள். பிறகு, நான் பரிசுத்தமானவர் என்று அறிவார்கள். அவ்வாறே என்னை அவர்கள் மதிப்பார்கள்.
RCTA நீ அதற்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "சீதோனே, இதோ, நாம் உனக்கு எதிராய் இருக்கிறோம்; உன் நடுவில் நமது மகிமையை வெளிப்படுத்துவோம்; அதன் நடுவில் வந்து நீதித் தீர்ப்பு வழங்கும் போது, நம்முடைய பரிசுத்தத்தை அங்கே காண்பிக்கும் போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
ECTA தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; சீதோனே, நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்; உன் நடுவில் என் மாட்சியை வெளிப்படுத்தும்போது, நான் உன்மீது தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றும்போது, உன் நடுவில் என் தூய்மையைக் காண்பிக்கும்போது, "நானே ஆண்டவர்" என உன்னிலுள்ளோர் அறிந்து கொள்வர்.