Versions
TOV அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.
IRVTA “அவன் சுகமாயிருக்கிறானா” என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: “சுகமாயிருக்கிறான்; அவனுடைய மகளாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள்” என்று சொன்னார்கள்.
ERVTA "அவர் எப்படி இருக்கிறார்?" என்று கேட்டான் யாக்கோபு. அதற்கு அவர்கள் "அவர் நன்றாக இருக்கிறார். அதோ பாரும் அவரது மகள் ராகேல் ஆட்டு மந்தையோடு வந்து கொண்டிருக்கிறாள்" என்றார்கள்.
RCTA அவர் நலமுடன் இருக்கிறாரா என்று (யாக்கோபு) கேட்க, (அவர்கள்:) அவன் நலமாய்த் தான் இருக்கிறான். அதோ! அவன் மகள் இராக்கேல் தன் மந்தையோடு வருகிறாள் என்றனர்.
ECTA அவர் நலம்தானா?" என்று யாக்கோபு கேட்க, அவர்கள் "ஆம், அவர் நலமே. இதோ! அவர் மகள் ராகேல் தன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகிறாள்" என்றார்கள்.