Versions
TOV என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்.
IRVTA என் மகளாகிய எனது மக்களின் பாடுகளினிமித்தம் கண்ணீர் விடுகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது;
என் குடல்கள் கொதிக்கிறது;
என் ஈரல் உருகி தரையிலே வடிகிறது;
குழந்தைகளும் சிறுபிள்ளைகளும் நகரத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கிறார்கள்.
ERVTA எனது கண்கள் கண்ணீரால் களைத்துப்போயின! எனது உள்மனம் கலங்குகிறது! எனது இதயம் தரையில் ஊற்றப்பட்டதுபோன்று உணர்கின்றது! எனது ஜனங்களின் அழிவைக்கண்டு நான் இவ்வாறு உணர்கிறேன். பிள்ளைகளும் குழந்தைகளும் நகரத்தின் பொது வீதிகளின் மூலைகளிலும் மயக்கமடைந்து கிடக்கின்றனர்.
RCTA காஃப்: கண்ணீர் சிந்தி என் கண்கள் சோர்ந்து போயின, என்னுள்ளம் கலங்கித் துடிக்கின்றது; என் மக்களாம் மகளுடைய துயரங் கண்டு, சிறுவரும் குழந்தைகளும் தெருக்களிலே விழுவதைக் கண்டு உள்ளம் உருகிப் பாகாய்ப் பூமியில் ஒடிச் சிதைகின்றது.
ECTA என் கண்கள் கண்ணீர் சொரிந்து சோர்ந்துள்ளன! என் குலை நடுங்குகின்றது! என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத் தரையில் சிதறுகின்றது! என் மக்களாகிய மகள் நசுக்கப் பட்டுள்ளாள்! நகர் வீதிகளில் குழந்தைகளும் மழலைகளும் மயங்கிக் கிடக்கிள்றனர்!