Versions
TOV அவள் வாசல்கள் தரையில் அமிழ்ந்திக்கிடக்கிறது; அவள் தாழ்ப்பாள்களை முறித்து உடைத்துப்போட்டார்; அவள் ராஜாவும் அவள் பிரபுக்களும் புறஜாதியாருக்குள் இருக்கிறார்கள்; வேதமுமில்லை; அவள் தீர்க்கதரிசிகளுக்குக் கர்த்தரால் தரிசனம் கிடைக்கிறதுமில்லை.
IRVTA எருசலேம் பட்டணத்து வாசல்கள் தரையில் புதைந்துகிடக்கிறது;
அவளுடைய தாழ்ப்பாள்களை உடைத்துப்போட்டார்;
அவளுடைய ராஜாவும் அவளுடைய பிரபுக்களும் அந்நியமக்களுக்குள் இருக்கிறார்கள்;
வேதமுமில்லை; அவளுடைய தீர்க்கதரிசிகளுக்குக் யெகோவாவால் தரிசனம் கிடைப்பதில்லை.
ERVTA எருசலேமின் வாசல்கள் தரையில் அமிழ்ந்துகிடந்தன. அவர் அதன் தாழ்ப்பாள்களை உடைத்து நொறுக்கிப்போட்டார். அவரது அரசன் மற்றும் இளவரசர்கள் அயல் நாடுகளில் இருக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு இனி வேறு போதனைகள் எதுவுமில்லை. எருசலேமின் தீர்க்கதரிசிகளும் கூட கர்த்தரிடமிருந்து எந்தவிதமான தரிசனத்தையும் பெறவில்லை.
RCTA தேத்: வாயில்கள் விழுந்து மண்ணில் அழுந்தின, தாழ்ப்பாள்களை அவர் முறித்தழித்தார்; அரசர்களும் தலைவர்களும் புறவினத்தாரிடை வாழ்கின்றனர், திருச்சட்டம் இல்லாமல் போயிற்று; சீயோனின் இறைவாக்கினர் காட்சியொன்றும் ஆண்டவரிடமிருந்து கண்டாரல்லர்.
ECTA அவளின் வாயிற்கதவுகள் மண்ணில் புதைந்து கிடந்தன; அதன் தாழ்களை உடைத்துச் சிதறடித்தார்; அவளின் அரசனும் தலைவர்களும் வேற்றினத்தாரிடையே உள்ளனர்! திருச்சட்டம் இல்லை; அவளின் இறைவாக்கினரும் ஆண்டவரின் காட்சி பெறவில்லை.