Versions
TOV பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள்.
IRVTA பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள்.
ERVTA அவர்கள் பாம்புகளைப்போன்று மண்ணை நக்குவார்கள். அவர்கள் பயத்தால் நடுங்குவார்கள். அவர்கள் தரையின் துவாரங்களில் உள்ள ஊர்வனவற்றைப் போன்று வெளியேவந்து தேவனாகிய கர்த்தரை அடைவார்கள். தேவனே, அவர்கள் அஞ்சி உம்மை மதிப்பார்கள்.
RCTA பாம்பைப் போலவும், நிலத்தில் ஊர்வனவற்றைப் போலவும் அவர்கள் மண்ணை நக்குவார்கள்; தங்கள் அரண்களை விட்டு நடுங்கிக் கொண்டு வெளிப்படுவர், நம் கடவுளாகிய ஆண்டவர் முன் திகிலுறுவர், உமக்கு அஞ்சுவார்கள்.
ECTA அவர்கள் பாம்பைப் போலவும் நிலத்தில் ஊர்வன போலவும் மண்ணை நக்குவார்கள்; தங்கள் எல்லைக் காப்புகளில் இருந்து நடுநடுங்கி வெளியே வருவார்கள்; நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அஞ்சி நடுங்குவார்கள். உமக்கே அவர்கள் அஞ்சுவார்கள்.