Versions
TOV சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.
IRVTA சிங்கம்போலவும் கொடிய சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்;
அவர்களை எழுப்புகிறவன் யார்?
உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்,
உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன்” PEPS என்றான்.
ERVTA "இஸ்ரவேல் ஜனங்கள் சிங்கம் போன்றவர்கள். அவர்கள் சுருண்டு படுத்திருக்கிறார்கள். ஆமாம்! அவர்கள் இளம் சிங்கத்தைப் போன்றவர்கள். எவரும் அவர்களை எழுப்ப விரும்பவில்லை! உங்களை ஆசீர்வதிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். உங்களை சபிப்பவர்கள் சபிக்கப்படுவார்கள்."
RCTA அவன் பதுங்கும் சிங்கம் போலும், யாரும் எழுப்பத் துணியாத பெண்சிங்கம் போலும் படுத்துறங்குவான். உனக்கு ஆசீர் அளிப்பவன் ஆசீர் பெறுவான்; உன்னை சபிப்பவன் சாபத்துக்கு உள்ளாவான் என்று எண்ணப்படுவான் என்றான்.
ECTA அவன் துயில் கொண்டான்; சிங்கம் போன்றும் பெண் சிங்கம் போன்றும் படுத்துக்கொண்டான்; அவனை எழுப்பி விடுவோன் யார்? உனக்கு ஆசி கூறுவோன் ஆசி பெறுவான்; எனவே உன்னைச் சபிப்போன் சாபமடைவான்! "