Versions
TOV என் நோவு நித்தியகாலமாகவும், என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?
IRVTA என் வியாதி நீண்டகாலமாகவும், என் காயம் ஆறாத பெரிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற தண்ணீரைப்போலவும் இருப்பீரோ?
ERVTA நான் ஏன் இன்னும் காயப்படுத்தப்படுகிறேன்? என்று எனக்குப் புரியவில்லை. எனது காயங்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை? அல்லது குணப்படுத்த முடியவில்லை? என்பது எனக்குப் புரியவில்லை. கர்த்தாவே! நீர் மாறியிருக்கிறீர் என நினைக்கிறேன். நீர் ஊற்று வறண்டு போனதுபோல இருக்கிறீர். நீர் ஊற்று ஒன்று நின்றுவிட்டது போல இருக்கிறீர்.
RCTA ஏன் என் துன்பம் நீடித்திருக்கின்றது? என் காயம் ஆறாத கொடிய புண்ணாயிருப்பதேன்? நீர் எனக்கு வஞ்சகக் கானல் நீராயும், பயனற்று வற்றிப் போகும் நீரோடையாயும் இருப்பீரோ?"
ECTA எனக்கு ஏன் தீராத வேதனை? குணமாகாக் கொடிய காயம்? நீர் எனக்குக் கானல் நீரென, ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!