Versions
TOV இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய் போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA இதினால் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்ப ஒழுங்குபடுத்துவேன்; என் முகத்திற்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ பயனற்றதிலிருந்து விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய் போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA பிறகு, கர்த்தர், "எரேமியா, நீ மாறி என்னிடம் திரும்பிவந்தால், பிறகு நான் உன்னைத் தண்டிக்கமாட்டேன். நீ மாறி என்னிடம் திரும்பிவந்தால், நீ எனக்கு சேவை செய்யலாம். நீ பயனற்ற வார்த்தைகளைப் பேசாமல், முக்கியமானவற்றைப்பற்றி பேசினால் பின் நீ எனக்காகப் பேசமுடியும். யூதாவின் ஜனங்கள் மாறி உன்னிடம் திரும்பி வருவார்கள். ஆனால் நீ மாறி அவர்களைப்போல் இருக்க வேண்டாம்.
RCTA ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: "நீ திரும்பி வந்தால், நாம் உன்னைப் பழைய நிலையில் வைப்போம், நீ நம் முன்னிலையில் நிற்பாய்; உயர்வானதை உரைத்துப் பயனற்றதை விலக்கினால் நீ நமது வாயாக இருப்பாய்; அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்; நீ அவர்களிடம் திரும்ப மாட்டாய்.
ECTA எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே; "நீ திரும்பி வந்தால் நான் உன்னை முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன். என்முன் வந்து நிற்பாய்; பயனில் நீக்கிப் பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாக இருப்பாய். அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்; நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம்.