Versions
TOV கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.
IRVTA யெகோவா தங்களை அனுப்பாமல் இருந்தும், யெகோவா சொன்னாரென்று சொல்லி, அவர்கள் பொய்யானதையும், பொய்க்குறியையும் பார்த்து, காரியத்தை நிர்வாகம் செய்யலாமென்று நம்பிக்கையாக இருக்கிறார்கள்.
ERVTA ‘பொய்த் தீர்க்கதரிசிகள் தரிசனங்களைக் கண்டதாகக் கூறினார்கள். அவர்கள் தம் மந்திரங்களைச் செய்தார்கள். அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்னார்கள். ஆனால் அவர்கள் பொய் சொன்னார்கள். அவர்கள் தம்மைக் கர்த்தர் அனுப்பியதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் பொய் சொன்னார்கள். அவர்கள் இன்னும் தாம் கூறிய பொய்கள் உண்மையாவதற்காக காத்திருக்கிறார்கள்.
RCTA அவர்கள் போலிக் காட்சிகளைக் கண்டு பொய் வாக்குகளைச் சொன்னார்கள்; ஆண்டவர் தங்களை அனுப்பாதிருந்தாலும், 'ஆண்டவர் சொன்னார்' என்று சொல்லி, தாங்கள் உரைத்த வாக்கு நிறைவேறும் என்று சாதிக்கவும் முற்பட்டார்கள்.
ECTA அவர்கள் பொய்க் காட்சி கண்டு, ஏமாற்றுக் குறி தந்து "இது ஆண்டவரின் வாக்கு" என்கின்றனர். அவர்களையோ ஆண்டவர் அனுப்பவே இல்லை.