Versions
TOV என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
IRVTA என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்;
நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
ERVTA கர்த்தாவே, நீர் என் பாறை. உதவிக்காக உம்மை அழைத்துக்கொண்டிருக்கிறேன். என் ஜெபங்களுக்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதிரும். உதவி கேட்கும் என் கூக்குரலுக்கு நீர் பதிலளிக்காதிருந்தால் கல்லறைக்குச் சென்ற பிணத்தைக் காட்டிலும் நான் மேலானவனில்லை என எண்ணுவேன்.
RCTA ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூவுகிறேன்; என் பாறை அரணே! என் குரல் உமது செவியில் விழுவதாக! என் குரலுக்கு நீர் செவிசாய்க்கவில்லையேல், படுகுழியில் செல்வோருக்கு ஒப்பாவேன் நான்.
ECTA ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; என் கற்பாறையே, என் குரலைக் கேளாதவர்போல் இராதேயும்; நீர் மௌனமாய் இருப்பீராகில், படுகுழியில் இறங்குவோருள் நானும் ஒருவனாகிவிடுவேன்.