Versions
TOV அப்பொழுது ராஜா அந்த ஸ்திரீக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னிடத்தில் கேட்கும் காரியத்தை நீ எனக்கு மறைக்க வேண்டாம் என்றான். அதற்கு அந்த ஸ்திரீ, ராஜாவாகிய என் ஆண்டவர் சொல்வாராக என்றாள்.
IRVTA அப்பொழுது ராஜா அந்தப் பெண்ணுக்கு பதிலாக: நான் உன்னிடம் கேட்கும் காரியத்தை நீ எனக்கு மறைக்க வேண்டாம் என்றான். அதற்கு அந்தப் பெண் பதிலாக, ராஜாவான என்னுடைய ஆண்டவர் சொல்லட்டும் என்றாள்.
ERVTA தாவீது அரசன் அந்த பெண்ணிற்கு உத்தரவாக, "நான் கேட்கவிருக்கும் கேள்விக்கு நீ பதில் சொல்ல வேண்டும்" என்றான். அப்பெண், "எனது அரசனாகிய ஆண்டவனே, தயவுசெய்து உங்கள் வினாவை சொல்லுங்கள் " என்றாள்.
RCTA இதற்கு மறுமொழியாக அரசர் அப் பெண்ணை நோக்கி, "நான் உன்னை ஒரு காரியம் கேட்கிறேன். ஒன்றும் மறைக்காதே" என்றார். அதற்கு அப் பெண், "என் தலைவராகிய அரசே, கேளும்" என்றாள்.
ECTA அதன்பின் தாவீது அப்பெண்ணிடம் மறுமொழியாக, "நான் உன்னிடம் கேட்பது எதற்கும் மறைக்காமல் பதில் சொல்! என்றார். அதற்கு அவள், "தயைகூர்ந்து என் தலைவராம் அரசர் கேட்கட்டும் "என்றாள்.