Versions
TOV எருசலேம் மிகுதியாய்ப் பாவஞ்செய்தாள்; ஆதலால் தூரஸ்திரீயைப்போலானாள்; அவளைக் கனம்பண்ணினவர்கள் எல்லாரும் அவளை அசட்டைபண்ணுகிறார்கள்; அவளுடைய மானத்தைக் கண்டார்கள்; அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.
IRVTA எருசலேம் மிகுதியாகப் பாவம்செய்தாள்;
ஆதலால் தீட்டான பெண்ணைப்போலானாள்;
அவளைக் கனப்படுத்தியவர்கள் எல்லோரும் அவளை அசட்டை செய்கிறார்கள்;
அவளுடைய நிர்வாணத்தைக் கண்டார்கள்;
அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.
ERVTA எருசலேம் மிக மோசமான பாவங்களைச் செய்தாள். எருசலேம் பாவம் செய்ததால், அவள் அழிக்கப்பட்ட நகரமானாள். ஜனங்கள் அவளது நிலையைக் கண்டு தங்களின் தலைகளை அசைத்து மறுதலிக்கிறார்கள். கடந்த காலத்தில் ஜனங்கள் அவளை மதித்தனர். இப்போது ஜனங்கள் அவளை வெறுக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் அவளை அவமானப்படுத்தினார்கள். எருசலேம் பெருமூச்சுவிட்டு பின்னிட்டுத் திரும்பினாள்.
RCTA ஹேத்: யெருசலேம் மாபாவம் செய்ததினால், தீட்டுப்பட்டவள் ஆகிவிட்டாள்; அவளை மதித்து வந்தவர் எல்லாரும் அவள் அம்மணத்தைக் கண்டு வெறுத்தார்கள். அவளோ விம்மி அழுது கொண்டு பின்புறம் திரும்பிக் கொள்கின்றாள்.
ECTA ஏராளமாய்ப் பாவம் செய்தாள் எருசலேம்; அதனால் அவள் கறைப்பட்டவள் ஆனாள்; அவளை முன்பு மதித்த அனைவரும் அவமதித்தனர்; அவளுடைய திறந்த மேனியைக் கண்டனர்; அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னோக்கித் திரும்பினாள்.