Bible Versions
Bible Books

2 Samuel 17:20 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்சலோமின் சேவகர் அந்த ஸ்திரீயினிடத்தில் வீட்டிற்குள் வந்து: அகிமாசும் யோனத்தானும் எங்கே என்று கேட்டார்கள்; அவர்களுக்கு அந்த ஸ்திரீ: வாய்க்காலுக்கு அப்பாலே போய்விட்டார்கள் என்றாள்; இவர்கள் தேடிக்காணாதேபோய், எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
IRVTA   அப்சலோமின் மனிதர்கள் அந்தப் பெண்ணிடம் வீட்டிற்குள் வந்து: அகிமாசும் யோனத்தானும் எங்கே என்று கேட்டார்கள்; அவர்களுக்கு அந்தப் பெண்: வாய்க்காலுக்கு அந்தப் பக்கத்திற்கு போய்விட்டார்கள் என்றாள்; இவர்கள் தேடியும் காணாமல், எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
ERVTA   அப்சலோமின் பணியாட்கள் வீட்டிலிருந்த பெண்ணிடம் வந்தார்கள். அவர்கள், "யோனத்தானும் அகிமாசும் எங்கே?" என்று கேட்டார்கள். அப்பெண் அப்சலோமின் வேலையாட்களிடம், அவர்கள் ஏற்கனவே நதியைக் கடந்துவிட்டார்கள் என்று கூறினாள். அப்சலோமின் வேலைக்காரர்கள் பின்பு யோனத்தானையும் அகிமாசையும் தேடினர், ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அப்சலோமின் வேலைக்காரர்கள் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
RCTA   அப்சலோமின் ஊழியர்கள் அவ்வீட்டிற்குள் வந்து அப்பெண்ணை நோக்கி, "அக்கிமாசும் யோனத்தாசும் எங்கே?" என்று கேட்டனர். அவர்களுக்கு அப்பெண், "அவர்கள் இங்கே வந்து சிறிது நீர் பருகி விட்டு விரைவாய் வெளியேறி விட்டனர்" என்றாள். இவர்கள் தேடியும் காணாது யெருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.
ECTA   அப்சலோமின் பணியாளர் வீட்டினுள் நுழைந்து அப்பெண்ணை நோக்கி, "அனிமாசும் யோனத்தானும் எங்கே? என்று கேட்க, அவள், "அவர்கள் ஆற்றைக் கடந்து சென்றுவிட்டனர்" என்று சொன்னான். அவர்கள் தேடியும் கண்டுபிடிக்க இயலாததால் எருசலேம் திரும்பினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us