Versions
TOV அதற்கு அவள்: என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைக் கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே.
IRVTA அதற்கு அவள்: என்னுடைய எஜமானே, எனக்குப்பின்பு உன்னுடைய மகனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என்னுடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய யெகோவாவைக் கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே.
ERVTA பத்சேபாள் அவனிடம், "ஐயா உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தி எனக்கு வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள். ‘எனக்குப் பிறகு உன் மகனான சாலொமோனே அடுத்த அரசன் என்று கூறியுள்ளீர். சாலொமோன் என் சிங்காசனத்தில் அமர்வான்’ என்று கூறியுள்ளீர்கள்.
RCTA அதற்கு அவள், "என் தலைவ, 'எனக்குப்பின் உன் மகன் சாலமோனே அரசாள்வான்; அவனே எனக்குப் பின் அரியணை ஏறுவான்' என்று நீர் உம்முடைய கடவுளாகிய ஆண்டவர் பெயரால் உம் அடியாளுக்கு ஆணையிட்டீரே.
ECTA அவரோ அவரிடம், "என் தலைவரே! நீர் உம் அடியவளாகிய எனக்கு, 'உன் மகன் சாலமோன் எனக்குப் பின் ஆட்சியை ஏற்று என் அரியணையில் அமர்வான்' என்று உம் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறவில்லையா?