Versions
TOV அப்பொழுது யோவாப் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி, ராஜாவை வாழ்த்தி, ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததினால், என் ஆண்டவனாகிய ராஜாவின் கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.
IRVTA அப்பொழுது யோவாப் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி, ராஜாவை வாழ்த்தி, ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததால், என்னுடைய ஆண்டவனாகிய ராஜாவின் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.
ERVTA யோவாப் முகங்குப்புற விழுந்து வணங்கினான். அவன் தாவீது அரசனை வாழ்த்தியபடியே, "நீங்கள் என்னிடம் கருணைக் காட்டுகிறீர்கள் என்பதை இன்று அறிகிறேன். நான் கேட்டதை நீர் நிறைவேற்றுகிறபடியால் அதை நான் அறிகிறேன்" என்றான்.
RCTA அப்பொழுது யோவாப் தரையில் முகம் குப்புற விழுந்து வணங்கி அரசரைப் போற்றி வாழ்த்தினான். பிறகு தாவீதை நோக்கி, "என் தலைவராகிய அரசே, நீர் உன் ஊழியனுடைய வார்த்தையைக் கேட்டதினால் உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்தது என்று நான் இன்று அறிந்து கொண்டேன்" என்றான்.
ECTA யோவாபு முகம் குப்புறத் தரையில் வணங்கி, அரசரை வாழ்த்தி, "என் தலைவராம் அரசே! உம் அடியானின் சொற்படி அரசர் செய்துவிட்டார். இதிலிருந்து நான் உன் கண்முன் கருணைப் பெற்றுவிட்டேன் என்று உம் அடியான் அறிவான்" என்று கூறினார்.