Bible Versions
Bible Books

Jeremiah 51:57 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அதின் பிரபுக்களையும், அதின் ஞானிகளையும், அதின் தலைவரையும், அதின் அதிகாரிகளையும், அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கிவிழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.
IRVTA   அதின் பிரபுக்களையும், அதின் ஞானிகளையும், அதின் தலைவரையும், அதின் அதிகாரிகளையும், அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கச்செய்வேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கிவிழுவார்கள் என்று சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள ராஜா சொல்லுகிறார்.
ERVTA   நான் பாபிலோனின் ஞானிகளையும் முக்கியமான அதிகாரிகளையும் குடிமயக்கத்துக்குள்ளாக்குவேன். நான் ஆளுநர்களையும் அதிகாரிகளையும் வீரர்களையும்கூடக் குடிக்கச்செய்வேன். பிறகு அவர்கள் என்றென்றைக்கும் உறங்குவார்கள். அவர்கள் எப்பொழுதும் எழமாட்டார்கள்" அரசர் இவற்றைச் சொன்னார். அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
RCTA   அதன் தலைவர்களையும் ஞானிகளையும் ஆளுநர்களையும், படைத்தலைவர்களையும் போர் வீரர்களையும் போதையேறச் செய்வோம்; அவர்களோ நீங்காத உறக்கத்தில் விழிக்காமல் உறங்கிடுவர், என்கிறார் சேனைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய அரசர்.
ECTA   அதன் தலைவர்கள், ஞானிகள், ஆளுநர்கள், படைத்தலைவர்கள், படைவீரர்கள் ஆகிய எல்லாரையும் நான் குடிவெறி கொள்ளச்செய்வேன். அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்; துயில் எழவே மாட்டார்கள், என்கிறார் "படைகளின் ஆண்டவர்" என்னும் பெயர் கொண்ட மன்னர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us