Versions
TOV அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.
IRVTA அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவிற்கு பணிவிடை செய்கிற வேலைக்காரர்கள்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.
ERVTA அதற்கு அரசன், "என்ன சிறப்பும், பெருமையும் இதற்காக மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது?" என்ற கேட்டான். வேலைக்காரர்கள் அரசனிடம், "மொர்தெகாய்க்கு எதுவும் செய்யப்படவில்லை" என்றனர்.
RCTA அரசன் அதைக் கேட்டு, "மார்தொக்கே இக்காரியத்தில் என் மேல் காட்டிய நேர்மைக்குக் கைம்மாறாக அவன் என்ன நன்மதிப்பும் பரிசும் பெற்றான்?" என்று கேட்டான். அதற்கு அரச அலுவலர்களும் ஊழியர்களும், "அவர் ஒன்றும் பெறவில்லை" என்றனர்.
ECTA அச்சமயம் மன்னர் இதற்காக மொர்தக்காய்க்கு என்ன மரியாதையும் சிறப்பும் செய்யப்பட்டடன என்று வினவ மன்னரின் பணியாளர் அவருக்கு யாதென்றும் செய்யப்படவில்லை என்றனர்.