Versions
TOV ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன் மனதிலே நினைத்து,
IRVTA ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னைத்தவிர, யாரை ராஜா கனப்படுத்த விரும்புவார் என்று தன்னுடைய மனதிலே நினைத்து,
ERVTA ஆமான் உள்ளே வந்தபோது, அரசன் அவனிடம், "ஆமான் அரசன் பெருமைப்படுத்த விரும்புகிற ஒருவனுக்கு என்ன செய்யலாம்?" என்று கேள்விக் கேட்டான். ஆமான் தனக்குள் இப்படியாக நினைத்துக் கொண்டான், "என்னைவிட அதிகமாக பெருமைப்படுத்தும்படி அரசன் விரும்புகிறவன் யாராக இருக்க முடியும்? அரசன் என்னை பெருமைப் படுத்துவதைப் பற்றியே என்று உறுதியாக நினைத்தான்."
RCTA ஆமான் உள்ளே வந்த போது அரசன் அவனை நோக்கி, "அரசர் ஒருவனை மகிமைப்படுத்தி உயர்த்த விரும்பினால், அவனுக்கு அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?" என்று கேட்டான். ஆமான் இதைக் கேட்டதும் தன்னையன்றி வேறு யாரை அரசர் மகிமைப்படுத்தப் போகிறார் என்று தன்னுள் எண்ணிக் கொண்டு, அரசனை நோக்கி,
ECTA ஆமானிடம், மன்னர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்கு என்ன செய்ய வேண்டும்? என்று மன்னர் வினவினார். என்னைவிட வேறு எவருக்கு மன்னர் மரியாதை செய்ய விரும்புவார் என்று ஆமான் தன் உள்ளத்தில் நினைத்துக் கொண்டான்.