Versions
TOV ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடத்தில் பேசும்படி ராஜஅரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.
IRVTA ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடம் பேசும்படி ராஜஅரண்மனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.
ERVTA அப்போது, அரசனது அரண்மனையில் வெளிப் பகுதியில் ஆமான் நுழைந்தான் அவன் தான் கட்டிய தூக்கு மரத்தில் மொர்தெகாய்யைத் தூக்கில் போடுவதற்காக அரசனைக் கேட்க வந்தான். அவன் முற்றத்தில் வரும்போது அரசன், "இப்போது முற்றத்தில் யார் இருக்கிறார்கள்?" என்று கேட்டான்.
RCTA உடனே அரசன், "முற்றத்தில் நிற்பது யார்?" என்று கேட்டான். அப்பொழுது ஆமான் தான் தயார் செய்திருந்த தூக்கு மரத்திலே மார்தொக்கேயைக் கட்டித் தொங்க விட அரசனின் உத்தரவு பெறும் பொருட்டு அரசனின் உள்முற்றத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
ECTA முற்றத்தில் இருப்பது யார்? என்று மன்னர் வினவினார். தான் நாட்டிய தூக்குமரத்தில் மொர்தக்காயைத் தூக்குலிட வேண்டும் என்று மன்னரிடம் வேண்டுவதற்காய் ஆமான் அவ்வமயம் அரசமாளிகையின் வெளிமுற்றத்தில் வந்து நின்றான்.