Bible Versions
Bible Books

2 Samuel 18:33 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.
IRVTA   அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, நகர வாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகும்போது: என் மகனான அப்சலோமே, என் மகனே, என் மகனான அப்சலோமே, நான் உனக்குப் பதிலாக இறந்துபோனால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான். PE
ERVTA   அப்போது அப்சலோம் மரித்துவிட்டான் என்பதை அரசன் அறிந்தான். அரசன் நிலை குலைந்தான். நகரவாயிலின் மேலிருந்த அறைக்கு அவன் சென்றான். அங்கே அவன் அழுதான். போகும்போது, "எனது மகன் அப்சலோமே, என் மகன் அப்சலோமே! நான் உனக்காக மரித்திருக்கலாம் எனவிரும்புகிறேன். என் மகனே, என் மகனே!" என்றான்.
RCTA   அதைக் கேட்டு அரசர் மிகவும் துயருற்று, மேல் மாடியில் இருந்த தம் அறைக்குச் சென்று அழுதார். அவர் ஏறிப்போகையில், "என் மகன் அப்சலோம்! அப்சலோம், என் மகனே! உனக்குப் பதிலாக நான் சாவேன். என் மகனே, அப்சலோம்!" என்று புலம்பி அழுதார்.
ECTA   அப்போது அவர் அதிர்ச்சியுற்று, "என்மகன் அப்சலோமே! என் மகனே! என் மகன் அப்சலோமே! உனக்கு பதில் நான் இறந்திருக்கலாமே! அப்சலோமே! என் மகனே!" என்று கதறிக்கொண்டே அவர் வாயிலின் மாடியறைக்குச் சென்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us