Versions
TOV அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும் ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.
IRVTA அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல கரிசனையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும் என்றும் ராஜாவிடமாவது சேனாதிபதியிடமாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்றும் அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் மக்களின் நடுவே நான் சுகமாகக் குடியிருக்கிறேன் என்றாள்.
ERVTA எலிசா தன் வேலையாளிடம், "இப்போது அவளிடம் "எங்களுக்கு வசதியானவற்றை உன்னால் முடிந்தவரை நன்கு செய்துள்ளாய். நான் உனக்காக என்ன செய்யவேண்டும்? நான் உனக்காக அரசனிடமோ அல்லது படைத் தலைவனிடமோ ஏதாவது பேசவேண்டுமா?" எனக் கேட்கும்படி சொன்னான். அதற்கு அவள், "இங்கே வாழுகின்ற என் சொந்த ஜனங்களில் நான் நன்றாகவே இருக்கிறேன்" என்றாள்.
RCTA அப்போது எலிசேயு தன் ஊழியனைப் பார்த்து, "நீ அவளோடு பேசி, 'அம்மணி, நீர் எல்லாவற்றிலும் வெகு சிரத்தையோடு எங்களுக்குப் பணிவிடை புரிந்து வந்துள்ளீர்; ஆதலின் நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? அரசரிடத்திலாவது, படைத் தலைவரிடமாவது பரிந்து பேசும்படி ஏதும் உளதா?' என்று கேள்" என்றார். அதற்கு அவள், "என்னுடைய இனத்தாரின் நடுவே நான் அமைதியாய் வாழ்ந்து வருகிறேன்" என்றாள்.
ECTA அவனும் அவரை அழைத்துவர, அவர் அவர் முன்னே வந்து நின்றார். அப்பொழுது அவர் கேகசியை நோக்கி, "நீ அவளிடம் 'அம்மா, நீங்கள் எங்களுக்காக இவ்வளவு சிரமம் எடுத்திருக்கிறீர்கள். ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? அரசரிடமோ படைத்தலைவரிடமோ பரிந்து பேசும்படி ஏதாவது உண்டா?' என்று கேள்" என்றார். அதற்கு அவர், "என்னுடைய இனத்தாரிடையே நான் நலமாய்த்தான் வாழ்ந்து வருகிறேன்" என்று பதிலளித்தார்.