Versions
TOV ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.
IRVTA மக்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; மக்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.
ERVTA 26.
RCTA இவ்வாறு மக்கள் ஒரு காட்டினுள் நுழைந்தனர். அங்குத் தேன் வடியக் கண்டனர். ஆனால் எவனும் தன் கையை வாயில் வைக்கவில்லை. ஏனெனில் மக்கள் ஆணைக்கு அஞ்சியிருந்தனர்.
ECTA மக்கள் காட்டினுள் நுழையும் போது தேன் ஒழுகிக் கொண்டிருந்தது. ஆனால் எவனும் தன் தன் கையை வாயில் வைக்கவில்லை. ஏனெனில் மக்கள் சாபத்திற்கு அஞ்சினார்கள்.