Versions
TOV இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத் பட்டணத்திற்குக் கொண்டுவராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின் நாட்டுப்புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான்.
IRVTA இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கும்படி ஒருவரையும் தாவீது காத் பட்டணத்திற்குக் கொண்டுவராதபடி, ஒரு ஆணையாவது பெண்ணையாவது உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தர்களின் நாட்டுப்புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இப்படியே செய்துகொண்டுவந்தான்.
ERVTA தாவீது காத்திலிருந்து உயிரோடு ஆண் பெண் யாரையும் ஒரு நாளும் கொண்டு வந்ததில்லை. "யாரையாவது உயிரோடு கொண்டு வந்தால் அவர்கள் உண்மையைச் சொல்லிவிடலாம்" என்று நினைத்தான். பெலிஸ்தர்களின் நாட்டில் இருக்கும்வரை தாவீது இப்படி செய்து வந்தான்.
RCTA தாவீது ஆண்களையோ பெண்களையோ உயிருடன் விட்டு வைத்ததில்லை. காரணம், அவர்களில் யாரையாவது கேத்துக்குக் கொண்டு வந்தால் அவர்கள், 'இவ்வாறெல்லாம் தாவீது எங்களுக்குச் செய்தான்' என்று தன்னைப்பற்றி அரசனிடம் கூறிவிடுவார்கள் என்று தாவீது அறிந்திருந்தான். அவன் பிலிஸ்தியர் நாட்டில் குடியிருந்த காலமெல்லாம், இதுவே அவன் தொழிலாய் இருந்தது.
ECTA தாவீது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைப்பதில்லை; ஏனெனில் அவர்கள் யாராவது காத்துக்குச் செய்தி கொண்டுவந்தால், "இவ்வாறெல்லாம் தாவீது எங்களுக்குச் செய்தான்" என்று மன்னரிடம் தம்மைப் பற்றித் தெரிவித்துவிடுவார்கள் "என்று தாவீது நினைத்தார். அவர் பெலிஸ்தியர் நாட்டில் குடியிருந்த நாளில் காலமெல்லாம் இதுவே அவரது வழக்கமாய் இருந்தது.