Versions
TOV அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
IRVTA அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கும்போது அவனுக்கு முன்பாகநின்ற முதியோர்களிடம் ஆலோசனைசெய்து, இந்த மக்களுக்கு மறுஉத்திரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
ERVTA பிறகு அரசன் ரெகொபெயாம் தன் தந்தையான சாலொமோனுடன் கூடவே இருந்த மூத்த பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்தான். அவர்களிடம் அவன், "இந்த ஜனங்களுக்கு நான் என்ன பதில் சொல்லவேண்டும்?" என்று கேட்டான்.
RCTA ரொபோவாம் தன் தந்தை சாலமோன் உயிரோடிருந்த காலத்தில் அவருக்குப் பணி புரிந்து வந்த மூப்பரைக் கலந்துபேசி, நான் இம்மக்களுக்கு மறுமொழி கொடுக்க வேண்டுமே; நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள்?" என்று வினவினான்.
ECTA பின்பு தன் தந்தை சாலமோன் உயிரோடிருக்கையில் அவரிடம் பணிபுரிந்த பெரியோர்களை நோக்கி ரெகபெயாம், "இம்மக்களுக்கு நான் பதிலளிப்பது குறித்து, என்ன அறிவுரை தருகிறீர்கள்?" என்று கேட்டான்.