Bible Versions
Bible Books

Isaiah 49:8 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பின்னும் கர்த்தர்: அநுக்கிரககாலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்;
IRVTA   {இஸ்ரவேலின் மறுசீரமைப்பு} PS பின்னும் யெகோவா: அனுக்கிரகக் காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சொந்தமாக்கிக்கொள்ளவும்;
ERVTA   கர்த்தர் கூறுகிறார், "எனது தயவைக் காட்டும் சிறப்பான நேரம் இருக்கிறது. அப்போது, நான் உனது ஜெபங்களுக்குப் பதில் தருவேன். நான் உன்னைக் காப்பாற்றும்போது அது சிறப்பான நாளாக இருக்கும். அந்த நேரத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன். நான் உன்னைப் பாதுகாப்பேன். எனக்கு ஜனங்களோடு ஒரு உடன்படிக்கை இருந்தது என்பதற்கு நீங்களே சாட்சியாக இருப்பீர்கள். இப்போது நாடு அழிக்கப்படுகிறது. ஆனால் தேசத்தை அதற்கு உரியவர்களிடம் நீ திருப்பிக் கொடுப்பாய்.
RCTA   ஆண்டவர் கூறுகிறார்: "உகந்த காலத்தில் உன் மன்றாட்டைக் கேட்டருள்வோம், மீட்பின் நாளில் உனக்கு உதவி புரிவோம்; உன்னைக் காத்தோம், மக்களுக்கு உடன்படிக்கையாய் உன்னை ஏற்படுத்தினோம்; உலகத்திற்குப் புத்துயிர் தரவும், சிதறுண்ட உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும்,
ECTA   ஆண்டவர் கூறுவது இதுவே; தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய்; இருந்தேன்; நாட்டை மீண்டும் நிலைநாட்டவும் பாழடைந்து கிடக்கும் உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும் நான் உம்மைப் பாதுகாத்து மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக ஏற்படுத்தினேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us