Versions
TOV இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான்.
IRVTA இந்த விதமாக அவன் அன்றையதினம் அவர்களை ஆசீர்வதித்து: “தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர்கள் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள்” என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு மேலாக வைத்தான்.
ERVTA இவ்விதமாக இஸ்ரவேல் அன்று அவர்களை ஆசீர்வதித்தான். "இஸ்ரவேலின் ஜனங்கள் உங்கள் பெயரைப் பயன்படுத்தி மற்றவரை வாழ்த்துவார்கள். அவர்கள், "எப்பிராயீமும் மனாசேயும் போல தேவன் உங்களை வாழ வைக்கட்டும் என்பார்கள்" என்றான். இவ்வாறு இஸ்ரவேல் எப்பீராயிமை மனாசேயைவிடப் பெரியவனாக்கினான்.
RCTA அவர்களை அப்பொழுதே ஆசிர்வதித்து: உன்னில் இஸ்ராயேல் ஆசீர்வதிக்கப்படுவதுமன்றி, கடவுள் எபிராயிமுக்கும் மனாசேக்கும் செய்ததுபோல் உனக்கும் செய்யக் கடவராக என்று சொல்லவும்படும் என்றான். அவ்விதமாய் எபிராயிமை மனாசேக்கு முன்னிடத்தில் வைத்தான்.
ECTA மேலும், அவர் அன்று அவர்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது; " "எப்ராயிம், மனாசேயைப்போல் உன்னையும் கடவுள் வளரச் செய்வாராக" என்று உங்கள் பெயரால் இஸ்ரயேல் ஆசி வழங்கும். "இவ்வாறு அவர் எப்ராயிமை மனாசேக்கு முன் வைத்தார்.