Versions
TOV அவன் இனி இங்கே வருவானா என்று அவர்கள் திரும்பக் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது: இதோ, அவன் தளவாடங்களிருக்கிற இடத்திலே ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்று கர்த்தர் சொன்னார்.
IRVTA அவன் இனி இங்கே வருவானா என்று அவர்கள் திரும்பக் யெகோவாவிடத்தில் விசாரித்தபோது: இதோ, அவன் பொருட்கள் வைக்கிற இடத்திலே ஒளிந்துகொண்டிருக்கிறான் என்று யெகோவா சொன்னார்.
ERVTA பிறகு அவர்கள் கர்த்தரிடம், "அவன் இன்னும் இங்கே வரவில்லையா?" எனக் கேட்டனர். அதற்கு கர்த்தர், "சவுல் கிடங்கில் பொருட்களுக்கு மறைவில் ஒளிந்துக் கொண்டிருக்கிறான்" என்றார்.
RCTA அதன் பின், "அவர் இங்கு வருவாரா?" என்று ஆண்டவரைக் கேட்டார்கள். "இதோ, அவன் வீட்டில் ஒளிந்திருக்கிறான்" என்று ஆண்டவர் மறுமொழி சொன்னார்.
ECTA "ஆள் இங்கே வந்துவிட்டானா? என்று அவர்கள் ஆண்டவரை வினவ, ஆண்டவர் ஆம்! அவன் பொருட்குவியலிடையே ஒளிந்துள்ளான்" என்று கூறினார்.