Versions
TOV அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்து கொண்டவனைப் பாருங்கள், சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள்.
IRVTA அப்பொழுது சாமுவேல் எல்லா மக்களையும் பார்த்து: யெகோவா தெரிந்து கொண்டவனைப் பாருங்கள், எல்லா மக்களுக்குள்ளும் அவனுக்குச் சமமானவன் இல்லை என்றான்; அப்பொழுது மக்கள் எல்லோரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள்.
ERVTA சாமுவேல் அனைத்து ஜனங்களிடமும், "கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதனைப் பாருங்கள். அவனைப் போன்று சிறப்புடையவன் வேறுயாருமில்லை" என்றார். பிறகு ஜனங்கள் "அரசனே நீடுழி வாழ்க!" என்று குரலெழுப்பினார்கள்.
RCTA அப்பொழுது சாமுவேல் எல்லா மக்களையும் நோக்கி, "மக்கள் அனைவரிலும் அவருக்கு இணை யாரும் இல்லாததால், ஆண்டவர் யாரைத் தேர்ந்து கொண்டுள்ளார் என்று நன்றாய்க் கண்டுகொண்டீர்கள்" என்றார். அப்பொழுது மக்கள் எல்லாரும், "அரசே, வாழி!" என்று ஆர்ப்பரித்தனர்.
ECTA சாமுவேல் மக்கள் அனைவரையும் நோக்கி, ஆண்டவர் தேர்ந்தெடுத்ததைப் பாருங்கள். மக்கள் அனைவரிலும் அவரைப்போல் வேறொருவரும் உண்டோ? என்றார். அப்போது மக்கள் அனைவரும் "அரசர் நீடூழி வாழ்க!" என்று ஆர்பரித்தனர்.