Versions
TOV அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறனா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்தப் பிள்ளையாண்டானுக்கு நடந்ததுபோல, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களுக்கும், பொல்லாப்புச் செய்ய உமக்கு விரோதமாய் எழும்புகிற யாவருக்கும் நடக்கக்கடவது என்றான்.
IRVTA அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்த வாலிபனுக்கு நடந்ததுபோல, ராஜாவான என் ஆண்டவனுடைய எதிரிகளுக்கும், தீங்கு செய்ய உமக்கு விரோதமாக எழும்புகிற யாவருக்கும் நடக்கட்டும் என்றான்.
ERVTA அரசன் கூஷியனை நோக்கி, "இளம் அப்சலோம் நலமா?" என்றான். கூஷியன் பதிலாக, "உங்களுக்கு எதிராகவரும் பகைவர்களும் ஜனங்களும் இந்த இளம் மனிதனைப் (அப்சலோமைப்) போல தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்" என்றான்.
RCTA அப்பொழுது அரசர் கூசாயியை நோக்கி, "என் மகன் அப்சலோம் நலந்தானா?" என்று கேட்டார். கூசாயி, "அவனுக்கு நேரிட்டது போல் என் தலைவராகிய அரசரின் எதிரிகளுக்கும், தீங்கு செய்ய உமக்கு எதிராய் எழும்பின யாவருக்கும் நிகழ்வதாக!" என்று மறுமொழி சொன்னான்.
ECTA "இளைஞன் அப்சலோம் நலமா? என்று அரசர் வினவ, கூசியன், "என் தலைவராம் அரசரின் எதிரிகளும் உனக்கு எதிராக தீங்கிழைக்க எழுந்துள்ள அனைவரும், அந்த இளைஞனைப் போல் ஆவார்களாக! என்றான்.