Bible Versions
Bible Books

John 9:16 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று.
IRVTA   அப்பொழுது பரிசேயர்களில் சிலர்: அந்த மனிதன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காததினால் அவன் தேவனிடத்தில் இருந்து வந்தவன் இல்லை என்றார்கள். வேறுசிலர்: பாவியாக இருக்கிற மனிதன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இந்தவிதமாக அவர்களுக்குள்ளே பிரிவினை ஏற்பட்டது.
ERVTA   சில பரிசேயர்கள், அந்த மனிதன் ஓய்வு நாள் பற்றிய சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே அவன் தேவனிடமிருந்து வரவில்லை என்றனர். ஆனால் சிலரோ, பாவம் செய்கிற எந்த மனிதராலும் இது போன்ற அற்புதங்களைச் செய்ய முடியாதே என்றனர். யூதர்கள் தங்களுக்குள் ஒத்துப் போகவில்லை.
RCTA   பரிசேயர்களுள் சிலர், "அவன் கடவுளிடமிருந்து வந்தவன் அல்லன். ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பதில்லை" என, சிலர், "பாவியானவன் இத்தகைய அருங்குறிகளை எப்படிச் செய்யமுடியும் ?" என்றனர். எனவே, அவர்களிடையே பிளவு ஏற்பட்டது.
ECTA   பரிசேயருள் சிலர், "ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது" என்று பேசிக் கொண்டனர். ஆனால் வேறு சிலர், "பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?" என்று கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us