Versions
TOV தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாய்ப் பிடுங்கிப்போட்டார்; சபைகூடுகிற தம்முடைய ஸ்தலங்களை அழித்தார்; கர்த்தர் சீயோனிலே பண்டிகையையும் ஓய்வு நாளையும் மறக்கப்பண்ணி, தமது உக்கிரமான கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் புறக்கணித்துவிட்டார்.
IRVTA தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாகப் பிடுங்கிப்போட்டார்;
சபைகூடுகிற தம்முடைய இடங்களை அழித்தார்;
யெகோவா சீயோனிலே பண்டிகையையும் ஓய்வு நாளையும் மறக்கச்செய்து,
தமது கடுங்கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் அகற்றிவிட்டார்.
ERVTA கர்த்தர் தனது சொந்த கூடாரத்தை ஒரு தோட்டத்தின் செடிகளைப் பிடுங்குவதைப் போன்று பிடுங்கிப்போட்டார். ஜனங்கள் போய் கூடி அவரை தொழுவதற்காக இருந்த இடத்தை அவர் அழித்திருந்தார். கர்த்தர் சீயோனில் சிறப்பு சபைக் கூட்டங்களையும், ஓய்வு நாட்களையும் மறக்கப்பண்ணினார். கர்த்தர் அரசன் மற்றும் ஆசாரியர்களை நிராகரித்தார். அவர் கோபங்கொண்டு அவர்களை நிராகரித்தார்.
RCTA வெள: தோட்டத்துக் குடிசை போலத் தன் கூடாரத்தைப் பாழாக்கினார், தம்முடைய இருப்பிடத்தைத் தகர்த்தெறிந்தார்; திருநாட்களும் ஒய்வு நாட்களும் சீயோனில் ஆண்டவர் மறக்கப்படச் செய்து விட்டார். அரசரையும் அர்ச்சகரையும் தம் கோபத்தின் ஆத்திரத்தில் புறக்கணித்துத் தள்ளி விட்டார்.
ECTA தோட்டத்துப் பரணைப் பிரித்தெறிவது போலத் தம் கூடாரத்தையும் பிரித்தெறிந்தார்; சபை கூடும் இடத்தையும் அழித்தார்; சீயோனில் ஆண்டவர் விழாக்களையும் ஓய்வுநாளையும் மறக்கச் செய்தார்; அவர் வெஞ்சினமுற்று அரசனையும் குருவையும் வெறுத்து ஒதுக்கினார்.