Versions
TOV மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால்,
IRVTA மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, யாராவது தன்னிடம் இருக்கிற வழக்குக்காக ராஜாவிடம் நியாயம் கேட்பதற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரைச் சேர்ந்தவன் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றின், இந்த ஊரைச் சேர்ந்தவன் என்று சொன்னால்,
ERVTA அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வாசலருகே நின்று, நியாயத்திற்காக தாவீது அரசனிடம் செல்லும் ஆட்களைக் கவனிப்பான். பின்பு அவர்களோடு பேசி, "எந்த நகரத்திலிருந்து வருகிறாய்?" என்பான். அம்மனிதன், "நான் இஸ்ரவேலின் இந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்" என்று கூறுவான்.
RCTA அன்றியும் அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வாயிலில் நின்று கொண்டு எவனாவது தனக்குள்ள வழக்கை முன்னிட்டு அரசரிடம் முடிவு கேட்க வருவதைக் கண்டால், அவனை அழைத்து, "உனக்கு எந்த ஊர்?" என்று கேட்பான். அவன், "உம் அடியான் இஸ்ராயேலின் இன்ன கோத்திரத்தான்" என்று சொல்லுவான்.
ECTA அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வயலின் பாதை அருகே நிற்பான்; யாரேனும் தனக்கிருந்த வழக்கை முன்னிட்டு அரசரிடம் தீர்ப்பு கேட்க வந்தால் அவனை அப்சலோம் தன்னிடம் அழைத்து, "நீ எந்நகரிலிருந்து வருகிறாய்? என்று கேட்பான். அவன், "உம் அடியான் இந்த நகரிலிருந்து இஸ்ரயேலின் இந்தக் குலத்திலிருந்து வருகிறேன் "என்று பதில் சொல்வான்.