Versions
TOV கர்த்தர் என்னை எருசலேமுக்குத் திரும்பி வரப்பண்ணினால், கர்த்தருக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியா தேசத்தில் கேசூரிலே குடியிருக்கும்போது, பொருத்தனை பண்ணினேன் என்றான்.
IRVTA யெகோவா என்னை எருசலேமிற்குத் திரும்பி வரச்செய்தால், யெகோவாவுக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியா தேசத்தில் கெசூரில் குடியிருக்கும்போது, பொருத்தனை செய்தேன் என்றான்.
ERVTA ஆராமிலுள்ள கேசூரில் வாழ்ந்து கொண்டிருக்கையில் அந்த வாக்குறுதியை நான் செய்தேன். ‘என்னை கர்த்தர் எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுவந்தால் நான் கர்த்தருக்கு சேவைச் செய்வேன்’ என்றேன்" என்றான்.
RCTA ஏனெனில் உம் அடியான் சீரியா நாட்டின் ஜெஸ்சூரில் இருந்த போது ஆண்டவரை நோக்கி, 'ஆண்டவர் என்னை யெருசலேமுக்குத் திரும்பிவர அருள் செய்தால் நான் ஆண்டவருக்குப் பலியிடுவேன்' என்று நேர்ச்சை செய்து கொண்டேன்" என்றான்.
ECTA உமது அடியான் சிரியாவிலுள்ள கெசூரில் வாழ்ந்த போது, "ஆண்டவர் என்னை எருசலேமுக்குத் திரும்பிக் கொண்டு சென்றால், நான் ஆண்டவரைத் தொழுவேன், என்று ஒரு நேர்ச்சை செய்தேன்" என்றான்.