Bible Versions
Bible Books

2 Kings 6:22 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறையாக்கிக்கொண்டவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான்.
IRVTA   அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறைபிடித்தவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் சாப்பிட்டுக் குடித்து, தங்கள் எஜமானிடத்திற்குப் போகும்படி, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கு முன்பாக வையும் என்றான்.
ERVTA   அதற்கு எலிசா, "இவர்களைக் கொல்ல வேண்டாம். நீ உனது வாளாலும் வில்லாலும் போரில் கைப்பற்றிய வீரர்களைக் கொல்லக்கூடாது! இவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடு. அவர்களை உண்ணவும் குடிக்கவும்விடு. பின் எஜமானனிடம் செல்லவும் அனுமதிகொடு" என்றான்.
RCTA   அதற்கு அவர், "அவர்களைக் கொல்ல வேண்டாம். ஏனெனில், நீர் அவர்களைக் கொல்வதற்கு வாளாலோ அம்புகளாலோ நீர் அவர்களைப் பிடிக்கவில்லை. மாறாக, அவர்கள் உண்டு குடித்துத் தங்கள் தலைவரிடம் திரும்பும்படி நீர் அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடும்" என்றார்.
ECTA   அதற்கு அவர், "கொல்லாதே! நீ சிறைப்படுத்தியவர்களை நீயே உன் வாளினாலோ அம்பினாலோ கொல்வாயா? எனவே அவர்கள் பசிதாகம் தீர அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடு. அவர்கள் தங்கள் தலைவனிடம் திரும்பிச் செல்லட்டும்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us