Bible Versions
Bible Books

Esther 9:31 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலும் இருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான்.
IRVTA   அவன் அகாஸ்வேருவின் ராஜ்ஜியத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலும் இருக்கிற எல்லா யூதர்களுக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய கடிதங்களை அனுப்பினான்.
ERVTA   மொர்தெகாய் யூதர்களுக்குப் பூரீம் விழாவை கொண்டாட ஆரம்பிக்கும்படி எழுதினான். எப்பொழுது இப்புதிய விடுமுறை நாளை கொண்டாட வேண்டும் என்றும் எழுதினான். யூதனான மொர்தெகாயும் அரசியான எஸ்தரும் யூதர்களுக்கு இக்கட்டளையை இட்டனர். அவர்கள் இவ்விரு நாட்களையும் விடுமுறை கொண்டாட்டமாக தங்களுக்கும், தங்கள் சந்ததிகளுக்கும் எற்படுத்தவேண்டும். அவர்கள் மற்ற விடுமுறை நாட்களில் உபவாசம் இருந்து, அழுது, நடந்த தீமைகளுக்கு இரங்கி நினைப்பதுபோன்று இந்த இரு நாட்களையும் கொண்டாடுவார்கள்.
RCTA   பூரிம் என்ற திருவிழாவைக் குறிப்பிட்ட காலத்தில் மிக்க மகிழ்ச்சியோடு கொணடாட வேண்டும் என்றும் எழுதிவைத்தார்கள். எஸ்தரும் மார்தொக்கேயும் கட்டளையிட்டவாறு, யூதர்கள் எல்லாரும் நடந்துகொண்டனர். தாங்களும் தங்கள் மக்களும் நோன்பு காத்து, பூரிம் திருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாட உடன்பட்டனர்.
ECTA   (26) யூதராகிய மொர்தக்காயும் அரசி எஸ்தரும் இட்ட ஆணையின்படி "பூரிம்" என்ற இந்த நாள்களை யூதரும் அவர்களின் "வழிமரபினரும் குறிக்கப்பட்ட காலத்தில் நோன்பு, புலம்பல் நாள்களாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us