Versions
TOV அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, ஜனங்கள் சாப்பிடும்படி அவர்களுக்கு வார் என்றான்; அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற்போயிற்று.
IRVTA அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, கூட்டத்தார் சாப்பிடும்படி அவர்களுக்கு கொடு என்றான்; அப்புறம் பானையிலே விஷம் இல்லாமல்போனது. PS
ERVTA ஆனால் எலிசாவோ, "சிறிது மாவு கொடுங்கள்" என்று கேட்க அவர்கள் கொடுத்தார்கள். அதனை அந்தப் பாத்திரத்தில் அவன் போட்டு, "இப்போது ஜனங்களுக்குச் கூழை ஊற்றுங்கள். அவர்கள் அதை குடிக்கலாம்" என்றான். பிறகு அந்தக் கூழில் எந்த குறையும் இல்லை!
RCTA எலிசேயு அவர்களைப் பார்த்து, "கொஞ்சம் மாவு கொண்டு வாருங்கள்" என்றார். அவர்கள் கொண்டு வரவே, அவர் அம் மாவைப் பானையில் போட்டு, "அவர்கள் உண்ணும்படி இதைப் பரிமாறுங்கள்" என்று சொன்னார். இப்பொழுது அது கசக்கவே இல்லை.
ECTA அப்பொழுது அவர், "கொஞ்சம் மாவு கொண்டு வாருங்கள்" என்றார். அவர் அதை பானையில் போட்டு, "இவர்கள் உண்ணும்படி இதைப் பறிமாறுங்கள்" என்று சொன்னார். பானையில் இருந்தது அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை.