Versions
TOV ஜனங்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவி செய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்.
IRVTA மக்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் ஓடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் இறந்துபோனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பத்தாயிரம்பேருக்கு சமமானவர்; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவி செய்கிறது எங்களுக்கு நலமாக இருக்கும் என்றார்கள்.
ERVTA ஆனால் ஜனங்கள், "இல்லை, நீங்கள் எங்களோடு வரக்கூடாது. ஏனெனில் நாங்கள் (யுத்தத்தில்) ஓடிவிட்டால் அப்சலோமின் ஆட்கள் பொருட்படுத்தமாட்டார்கள். நம்மில் பாதி பேர் கொல்லப்பட்டாலும் அப்சலோமின் ஆட்கள் கவலைப்படமாட்டார்கள். ஆனால் நீங்கள் எங்களில் 10,000 பேருக்கு ஒப்பானவர்கள்! நீங்கள் நகரத்தில் தங்கியருப்பதே நல்லது. பின்பு எங்களுக்கு உதவி தேவையானால், நீங்கள் எங்களுக்கு உதவ முடியும்" என்றார்கள்.
RCTA அதற்கு மக்கள், "நீர் வர வேண்டாம். நாங்கள் புறமுதுகு காட்டி ஓடினாலும் அவர்கள் அதைப்பற்றி அதிகம் கவலைப்பட மாட்டார்கள். எங்களில் பாதிப்பேர் மடிந்தாலும் அதை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார்கள்; நீர் ஒருவரே பதினாயிரம் பேருக்கு இணையாக மதிக்கப்படுகிறீர். ஆதலால் நீர் எங்களுக்கு உதவியாக நகரில் இருப்பதே சிறந்தது" என்று சொன்னார்கள்.
ECTA நீர் வெளியே வரவேண்டாம். ஏனெனில் நாங்கள் புறமுதுகாட்டி ஓடினால், அவர்கள் எங்களைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். எங்களுள் பாதிப்போர் மடிந்தாலும் எங்களைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். நீர் ஒருவர் எங்களுள் பத்தாயிரம் பேருக்குச் சமம். தற்போது எங்களுக்கு நகரிலிருந்தே நீர் உதவி செய்வது நல்லது" என்று வீரர்கள் அவரிடம் சொன்னார்கள்.