Versions
TOV யாரைக்கொண்டு என்று ஆகாப் கேட்டான்; அதற்கு அவன்: மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரைக்கொண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்; பின்பு அவன், யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான்.
IRVTA யாரைக்கொண்டு என்று ஆகாப் கேட்டான்; அதற்கு அவன்: மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்களைக்கொண்டு என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்; பின்பு அவன், யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான்.
ERVTA அதற்கு ஆகாப், "யார் மூலம்?" என்று கேட்டான். அதற்கு அத்தீர்க்கதரிசி, "அரசாங்க அதிகாரிகளின் ‘இளம் உதவியாளர்கள் மூலம்’ என்று கர்த்தர் கூறுகிறார்" என்றான். மேலும் அரசன், "போரை யார் துவக்க வேண்டும்?" என்று கேட்க, தீர்க்கதரிசி, "நீ தான்" என்று பதில் சொன்னான்.
RCTA ஆக்காப் அவரைப் பார்த்து, "யார் மூலம் இது நடைபெறும்?" என்று கேட்க, "மாநில அதிபர்கள் மூலம்' என்று ஆண்டவர் சொல்கிறார்" என்றார். மறுபடியும் ஆக்காப், 'போரை யார் தொடங்க வேண்டும்?" என்று வினவ, அவர், "நீர் தான்" என்றார்.
ECTA ஆகாபு அவரைப் பார்த்து, "யார் மூலம் இது நடைபெறும்?" என்று வினவ அவர் "ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; மாநிலத் தலைவர்களின் இளம் வீரர்கள் மூலம்" என்றார். மறுபடியும் அவன் "போரை யார் தொடங்க வேண்டும்?" என்று கேட்க, அவர் "நீ தான்?" என்றார்.