Bible Versions
Bible Books

Daniel 4:35 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.
IRVTA   பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிமக்களையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.
ERVTA   பூமியிலுள்ள ஜனங்கள் உண்மையிலேயே முக்கியமானவர்களல்ல. பரலோகத்தின் வல்லமைகளோடும், பூமியின் ஜனங்களோடும் தேவன் என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்கிறார். எவராலும் அவரது அதிகாரமுள்ள கையை நிறுத்தமுடியாது. எவராலும் அவரது செயல்களைக் கேள் விகேட்கமுடியாது.
RCTA   (32) உலகத்தார் அனைவரும் அவர் முன் ஒன்றுமே இல்லை, வானத்தின் சேனைகள் நடுவிலும், உலகத்துக் குடிமக்கள் நடுவிலும் தம் திருவுளத்தின் படியே அவர் செயலாற்றுகிறார்; அவரது கையைத் தடுக்க வல்லவனோ, 'ஏன் இப்படிச் செய்தீர்?' எனக் கேட்கக் கூடியவனோ இல்லை."
ECTA   உலகின் உயிர்கள் அனைத்தும் அவர் திருமுன் ஒன்றுமில்லை! வான்படை நடுவிலும் உலகில் வாழ்வோர் இடையிலும் அவர் தாம் விரும்புவதையே செய்கின்றார்! அவரது வலிய கையைத் தடுக்கவோ "நீர் என்ன செய்கிறீர்?" என்று அவருடைய செயல்களைப்பற்றி வினவவோ எவராலும் இயலாது!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us