Versions
TOV ஆகையால் யாசேருக்காக அழுததுபோல, சிப்மா ஊர் திராட்சச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலேயே, உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோயிற்று.
IRVTA ஆகையால் யாசேருக்காக அழுததுபோல, சீப்மா ஊர் திராட்சைச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலெயே, உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சைப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோனது.
ERVTA "நான் யாசேர் மற்றும் சிப்மா ஜனங்களோடு அழுவேன், ஏனென்றால், திராட்சைகள் அழிக்கப்பட்டுவிட்டன. நான் எஸ்போனே மற்றும் எலெயாலே ஜனங்களோடு அழுவேன். ஏனென்றால், அங்கே அறுவடை நடைபெறாது. கோடைகாலப் பழங்களும் இல்லாமல் போகும். மகிழ்ச்சி ஆரவாரங்களும் இல்லாமல் போகும்.
RCTA ஆதலால் யாசேரைப் போலவே நானும் சபாமா திராட்சைக் கொடிக்காகப் புலம்பியழுவேன்; எசேபோனே, ஏலயாலே, உங்களை என் கண்ணீரால் நனைத்திடுவேன்; ஏனெனில் உன் கனிகள் மேலும், அறுவடை மேலும் போர்க்களத்தின் ஆரவாரம் கேட்டதே.
ECTA ஆதலால் யாசேருக்காக அழுததுபோல் நான் சிபிமாவின் திராட்சைத் தோட்டத்திற்காகக் கண்ணீர் விடுகின்றேன்; எஸ்போன்! எலயாரே! உங்களை என் கண்ணீரால் நனைக்கின்றேன்; ஏனெனில் உங்கள் கோடைக் கனிக்காகவும் அறுவடைக்காகவும் எழும் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்கி விட்டது.