Bible Versions
Bible Books

Isaiah 48:5 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   ஆகையால்: என் விக்கிரகம் அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த சுரூபமும், நான் வார்ப்பித்த விக்கிரகமும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்குஅறிவித்து, அவைகள் வராததற்கு முன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்.
IRVTA   ஆகையால்: என் சிலை அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த உருவமும், நான் வார்ப்பித்த சிலையும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்கு முன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்.
ERVTA   எனவே, நீண்ட காலத்துக்கு முன்பே நான் என்ன நடக்குமென சொன்னேன். அவை நடப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே நான் அவற்றைப்பற்றி உங்களுக்குச் சொன்னேன். நான் இதைச் செய்தேன். எனவே நீ, ‘எங்கள் விக்கிரகங்கள் (தெய்வங்கள்) இந்த நடபடிகளை நடக்க செய்தன’ என்று சொல்ல முடியாது. நான் இதைச் செய்தேன். எனவே நீ, ‘எங்கள் விக்கிரகங்கள், எங்கள் சிலைகளால் இது நிகழ்ந்தது’ என்று சொல்லமுடியாது.
RCTA   ஆகவே, நீ, 'என் சிலைகளே இவற்றைச் செய்தன, செதுக்கப்பட்ட உருவங்களும், வார்க்கப்பட்ட படிமங்களுமே இவற்றைத் திட்டம் செய்தன' என்று சொல்லாதபடி, முதலிலிருந்தே உனக்கு முன்னறிவித்தோம், நிகழா முன்பே அவற்றை உனக்குக் குறிப்பிட்டோம்.
ECTA   எனவே அவற்றை முன்கூட்டியே உனக்கு அறிவித்தேன்; அவை நிகழ்வதற்குமுன் உனக்குத் தெரியப்படுத்தினேன்; "என் சிலை அவற்றைச் செய்தது; நான் வார்த்த வடிவமும்; செதுக்கிய உருவமும் அவற்றைக் கட்டளையிட்டன" என்று நீ கூறாதிருக்கவே அவ்வாறு செய்தேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us