Versions
TOV ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான்.
IRVTA ஒருவன் ஒரு மரத்தை வெட்டி வீழ்த்தும்போது கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று சத்தமிட்டான்.
ERVTA ஆனால் ஒரு மனிதன் மரத்தை வெட்டும்போது, அவனது கோடரியின் தலை கழன்று தண்ணீருக்குள் விழுந்துவிட்டது. அதற்கு அவன், "ஐயோ என் எஜமானனே! அது கடனாக வாங்கியதாயிற்றே!" என்று கூறினான்.
RCTA அவ்வாறு அவர்கள் மரங்களை வெட்டிக் கொண்டிருந்த போது, ஒருவனுடைய கோடரி பிடி கழன்று நீரில் விழுந்தது. உடனே, அவன் அப்போது எலிசேயுவை நோக்கி, "ஐயோ, என் குருவே! ஐயையோ, இதனை இரவலாயன்றோ வாங்கி வந்தேன்" எனக் கூக்குரலிட்டான்.
ECTA அவர்கள் மரங்களை வெட்டி வீழ்த்தினர். அவ்வாறு ஒருவன் உத்திரம் வெட்டிக்கொண்டிருந்தபோது அவனது கோடரி கழன்று தண்ணீரில் விழுந்தது. உடனே அவன் "ஐயோ! என் தலைவரே, இது இரவல் பொருளாயிற்றே!" என்று கத்தினான்.