Versions
TOV அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத் தொடர்ந்துபோய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான்.
IRVTA அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இரவிலே பெலிஸ்தர்களைத் தொடர்ந்துபோய், காலை வெளிச்சமாகும் வரை அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவனிடத்தில் சேர்வோம் என்றான்.
ERVTA சவுல், "இன்று இரவு பெலிஸ்தர்களுக்கும் பின்னால்போய் அவர்களைக் கொன்று அவர்களுடையதை எடுத்து வருவோம்!" என்று சொன்னான். படையினர், "உங்களுக்குச் சரி என்று படுவதைச் செய்யுங்கள்" என்று சொன்னார்கள். ஆனால் ஆசாரியனோ, "தேவனைக் கேட்போம்" என்றான்.
RCTA மீண்டும் சவுல், "நாம் இரவில் பிலிஸ்தியர் மேல் பாய்ந்து விடியும் வரை அவர்களைக் கொன்று குவிப்போம். அவர்களில் ஒருவனையும் விட்டு வைக்கக் கூடாது" என்று சொன்னார். அதற்கு மக்கள், "உமக்கு நலம் என்று தோன்றுவதை எல்லாம் செய்யும்" என்றனர். குருவோ, "நாம் இங்குக் கடவுளை அண்டி போக வேண்டும்" என்று சொன்னார்.
ECTA அதன்பிறகு சவுல் "இரவில் பெலிஸ்தியரைக் பின் தொடர்ந்து சென்று விடியற் காலை வரை அவர்களைக் கொள்ளையடிப்போம். அவர்களுள் ஒருவரையும் விட மாட்டோம் என்றார். அதற்கு வீரர்கள், "உமக்கு நல்லதெனப் பட்டத்தைச் செய்யும். குருக்களோ, "நாம் இங்கே கடவுளை அனுகுவோம் "என்றார்கள்.