Versions
TOV அதற்கு அந்தப் பிரதானி தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின்படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே.
IRVTA அதற்கு அந்த அதிகாரி தேவனுடைய மனிதனுக்கு மறுமொழியாக: இதோ, யெகோவா வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின்படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே.
ERVTA ஆனால் அந்த அதிகாரி அவனுக்கு, "பரலோகத்தின் ஜன்னல்கள் திறந்தாலும் அது சாத்தியமில்லை!" என்று பதில் சொல்ல, எலிசா, "இதனை நீ உன் கண்களால் காண்பாய், ஆனால் அந்த உணவை உன்னால் உண்ண முடியாது" என்றான்.
RCTA அந்தப் படைத்தலைவன் கடவுளின் மனிதரை நோக்கி, "ஆண்டவர் வானினின்று தானியத்தைத் திரளாகப் பொழிந்தாலும் நீர் கூறுவது நிறைவேறாது" என்று சொல்லியிருந்தான். அதற்குக் கடவுளின் மனிதர் "நீர் அதை கண்ணாரக் காண்பீர்; ஆனால் அதில் கொஞ்சமாவது உண்ணமாட்டீர்" என்று கூறியிருந்தார்.
ECTA ஏனெனில், அந்த அதிகாரி கடவுளின் அடியவரை நோக்கி, "இதோ! பாரும் ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்துவிட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா?" என்று கேட்டிருந்தான். அதற்கு அவர், "இதை நீ உன் கண்களால் காண்பாய். ஆனால் அதில் எதையும் நீ உண்ணமாட்டாய்" என்று கூறியிருந்தார்.