Versions
TOV அந்நாளில் உங்கள்பேரில் ஒப்புச்சொல்லி, நாம் முற்றிலும் பாழானோம்; நமது ஜனத்தின் சுதந்தரத்தை மாற்றிப்போட்டார்; என்னமாய் அதை என்னைவிட்டு நீக்கிப்போட்டார்! நமது வயல்களைப் பிடுங்கிப் பகிர்ந்துகொடுத்தாரே என்று துயரமான புலம்பலாய்ப் புலம்புவார்கள்.
IRVTA அந்நாளில் உங்களை உதாரணமாகச்சொல்லி, நாம் முற்றிலும் பாழானோம்; நமது மக்களின் எல்லையை மாற்றிப்போட்டார்; எப்படியாக அதை என்னைவிட்டு நீக்கிப்போட்டார்! நமது வயல்களைப் பிடுங்கிப் பகிர்ந்துகொடுத்தாரே என்று துயரமான புலம்பலாகப் புலம்புவார்கள்.
ERVTA பிறகு ஜனங்கள் உன்னைப்பற்றி பாட்டு இயற்றுவார்கள். ஜனங்கள் இந்தச் சோகப் பாடலைப் பாடுவார்கள்: நாங்கள் அழிக்கப்படுகிறோம். கர்த்தர் எங்களது நிலத்தை எடுத்துக் கொண்டார். அவர் அதனை மற்றவர்களுக்குக் கொடுத்தார். ஆமாம், அவர் எனது நிலங்களை என்னிடமிருந்து எடுத்தார். கர்த்தர் நமது வயல்களைப் பகைவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கிறார்.
RCTA அந்நாளில் மக்கள் உங்கள்மேல் வசைப்பாடல் புனைந்து, "நாங்கள் முற்றிலும் பாழாய்ப்போனோம், என் மக்களின் உரிமைச் சொத்து பறிபோயிற்று. ஐயோ, என்னிடமிருந்து அது பறிக்கப்படுகிறதே! கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறதே!" என்று ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.
ECTA அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி இரங்கற்பா இயற்றி, "அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே; ஆண்டவருடைய மக்களின் உரிமைச்சொத்து கைமாறிவிட்டதே! நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக் கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றாரே! என்று ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.