Bible Versions
Bible Books

2 Kings 8:12 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவன் அழுகிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன்; நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்கள் வாலிபரைப் பட்டயத்தால் கொன்று, அவர்கள் குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான்.
IRVTA   அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவனே, ஏன் அழுகிறீர் என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் மக்களுக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியால் அழுகிறேன்; நீ அவர்களுடைய கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்களுடைய வாலிபர்களைப் பட்டயத்தால் கொன்று, அவர்களுடைய குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்களுடைய கர்ப்பவதிகளின் வயிற்றைக் கிழித்துப்போடுவாய் என்றான்.
ERVTA   ஆசகேல் அவனிடம், "ஐயா ஏன் அழுகிறீர்?" என்று கேட்டான். அதற்கு எலிசா, "நீ இஸ்ரவேலர்களுக்குச் செய்யப்போகும் தீமைகள் என்னென்ன என்பதை நான் அறிவேன். அதற்காக அழுகிறேன். நீ அவர்களின் கோட்டையுள்ள நகரங்களை எரிப்பாய். நீ வாளால் இளைஞர்களைக் கொல்வாய், குழந்தைகளைக் கொல்வாய், கருவிலுள்ள குழந்தைகளையும் கீறிப்போடுவாய்" என்றான்.
RCTA   அசாயேல் அவரைப் பார்த்து, "தாங்கள் இவ்வாறு அழுவது- ஏன்?" என்று கேட்டான். அதற்கு அவர், "நீ இஸ்ராயேல் மக்களுக்குச் செய்யவிருக்கிற தீமைகளை நான் அறிவேன். அவர்களின் சிறந்த நகர்களைத் தீக்கு இரையாக்குவாய்; இளைஞரை வாளுக்கு இரையாக்குவாய்; சிறு குழந்தைகளைத் தரையில் அறைந்து கொல்லுவாய்; கருவுற்ற பெண்களின் வயிற்றைக் குத்திக் கிழிப்பாய் என்று எனக்குத் தெரியும்" என்றார்.
ECTA   அசாவேல் அவரை நோக்கி, "என் தலைவரே, நீர் அழுவது ஏன்?" என்று கேட்டான். அதற்கு அவர், "நீ இஸ்ரயேல் மக்களுக்கு செய்யவிருக்கிற தீமைகளை நான் அறிவேன்; அவர்களின் கோட்டைகளைத் தீக்கிரையாக்குவாய்; அவர்களுடைய இளைஞர்களை வாளுக்கு இரையாக்குவாய்; அவர்களுடைய சிறு குழந்தைகளைத் தரையில் மோதிக் கொல்வாய்; அவர்களுடைய கருவுற்ற பெண்களின் வயிற்றைக் குத்திக் கிழிப்பாய்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us