Versions
TOV இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.
IRVTA இதோ, பூமியிலுள்ள மக்களின் அக்கிரமத்தின்காரணமாக அவர்களை விசாரிக்க யெகோவா தம்முடைய இடத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும். PE
ERVTA கர்த்தர் அவரது இடத்தை விட்டு உலக ஜனங்களை அவர்கள் செய்த தீமைக்காக நியாயந்தீர்க்க வருவார். கொல்லப்பட்ட ஜனங்களின் இரத்தத்தைப் பூமி காட்டும். இந்த ஜனங்களை இனி பூமி மூடி வைக்காது.
RCTA ஏனெனில், இதோ தம்முடைய இடத்திலிருந்து ஆண்டவர் வெளியே வருகிறார்; உலக மக்கள் அவருக்கெதிராய்ச் செய்த அக்கிரமத்துக்காக அவர்களைத் தண்டிக்க வருகிறார்; தன்மேல் சிந்தப்பட்ட இரத்தத்தை நிலம் வெளிப்படுத்தும்; கொலையுண்டவர்களை மறைத்து வைக்காது.
ECTA மண்ணுலகில் வாழ்வோர் தமக்கு எதிராகச் செய்த தீச் செயலுக்குத் தண்டனை வழங்க, ஆண்டவர் தம் திருத்தலத்திலிருந்து புறப்படுகின்றார்; மண்ணுலகம் தன் இரத்தப்பழியை வெளிக் கொணரும்; அதில் கொலை செய்யப்பட்டவர்களை இனியும் இது மூடிமறைக்காது.