Versions
TOV வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?
IRVTA {சாலோமொனின் வருகை} PS வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும்
வியாபாரிகளுடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி,
தூபமேகத்தைப்போல் வனாந்திரத்திலிருந்து வருகிற இவர் யார்?
ERVTA பெரும் ஜனங்கள் கூட்டத்தோடு வனாந்தரத்திலிருந்து வருகின்ற அந்தப் பெண் யார்? மேகங்களின் கூட்டத்தைப்போல வெள்ளைப் போளத்திலும், சாம்பிராணியிலும், சகல நறுமணத்திலும், வரும் புகைபோல அவர்களுக்குப் பின்னால் புழுதி எழும்புகிறது.
RCTA மூன்றாம் கவிதை: பாலை வெளியிலிருந்து எழுந்து வரும் அது என்ன? புகைத் தூண் போல் தோன்றுகிறதே! வெள்ளைப் போளமும் சாம்பிராணியும் பல்வகை நறுமணப் பொடிகளும் கலந்து நறுமணம் கமழ வருவது யாதோ?
ECTA என்ன அது? பாலைவெளியிலிருந்து புகைத்தூண்போல், எழுந்துவருகிறதே! வெள்ளைப்போளம் மணக்க, சாம்பிராணி புகைய, வணிகர்கொணர் பல்வகைப் பொடிகள் யாவும் மணங்கமழ வருகிறதே! அது என்ன?