Versions
TOV அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.
IRVTA அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சமூகத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.
ERVTA கொர்நேலியு தேவதூதனைக் கண்டு பயந்து, ஆண்டவரே, என்ன வேண்டும்? என்றான். தேவதூதன் கொர்நேலியுவிடம், தேவன் உனது பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்த்தார். நீ ஏழை மக்களுக்குக் கொடுக்கும் தருமங்களை அவர் பார்த்தார். தேவன் உன்னை நினைவு கூருகிறார்.
RCTA அத்தூதரை அவன் உற்று நோக்க, அச்சம் மேலிட்டவனாய், "ஆண்டவரே, என்ன?" என்று கேட்டான். அவர் அவனுக்கு, "நீர் செய்த மன்றாட்டுக்களும் அறங்களும் கடவுள் திருவடியைச் சேர்ந்துள்ளன. அவற்றை அவர் நினைவு கூர்ந்தார்.
ECTA அவர் வானதூதரை உற்றுப்பார்த்து, "ஆண்டவரே, என்ன?" என்று அச்சத்தோடு கேட்டார். அதற்குத் தூதர், "உமது வேண்டல்களும் இரக்கச் செயல்களும் கடவுள் திருமுன் சென்றடைந்துள்ளன; அவற்றை அவர் நினைவில் கொண்டுள்ளார்.