Versions
TOV கர்த்தர் என்னை நோக்கி: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என் ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
IRVTA யெகோவா என்னை நோக்கி: ஆமோஸே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேல் என்னும் என்னுடைய மக்களின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
ERVTA கர்த்தர், "ஆமோஸ், என்ன பார்க்கிறாய்?" என்று கேட்டார். நான் "ஒரு தூக்கு நூல்" என்றேன். பிறகு என் ஆண்டவர், "பார், என் இஸ்ரவேல் ஜனங்களிடம் தூக்கு நூலை நான் விடுவேன். நான் அவர்களது "கோணல் தன்மை" இனிமேலும் பரிசோதனையைக் கடந்து செல்ல விடமாட்டேன். நான் அந்தக் கெட்ட பகுதிகளை நீக்குவேன்.
RCTA ஆமோசே, நீ காண்பதென்ன?" என்று ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்டார். நான், "அது தூக்கு நூற்குண்டு" என்றேன்; ஆண்டவர் தொடர்ந்து சொன்னார்: "இதோ, தூக்கு நூற்குண்டு நம் மக்களாகிய இஸ்ராயேலின் நடுவில் தொங்க விட்டுப் பரிசோதிக்கப் போகிறோம்; இனி அவர்களை ஒரு போதும் மன்னியோம்;
ECTA "ஆமோஸ்! நீ காண்பதென்ன?" என்று ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்டார். நான், "அது தூக்கு நூல் குண்டு" என்றேன். தலைவர் தொடர்ந்து சொன்னார்; "தூக்கு நூல் குண்டை என் மக்களாகிய இஸ்ரயேலின் நடுவில் தொங்கவிடப் போகிறேன்; இனி நான் அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்லப்போவதில்லை ".